Saturday, September 5, 2009

வேதகால ஆசிரியர்களின் பத்துக் கட்டளைகள்


கல்வியை முடித்து வெளியேறும் மாணாக்கர்களுக்கு வேதகால ஆசிரியர்கள் பத்துக் கட்டளைகளை அறிவுறுத்தியுள்ளனர்.

அவையாவன.

1. உண்மையைக் கடைப்பிடி.
2. நேர்மையாய் இரு.
3. நன்மைதரும் செயல்களில் ஈடுபடு.
4. செல்வத்தைத் தேடு.
5. இறைவனையும் முன்னோரையும் வழிபடு.
6. பெற்றோர் பிறர் நலனில் அக்கறை கொள்.
7. கற்றலையும் கற்பித்தலையும் கைக்கொள்.
8. அல்லலை அகற்றி நல்லவை செய்.
9. முழுமனதுடன் அறவழியில் மனித நேயமுடன் வாரி வழங்கு.
10.வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்.


Share/Save/Bookmark



Monday, August 24, 2009

எங்கள் ஊர்



தம்பை ஊர் எங்கள் ஊர்

தமிழர் ஒன்றாய் வாழும் ஊர்

தும்பை மலர் சூடும் கோணைத்

தூயவன் வாழ் தம்பை ஊர்


வளங் கொழிக்கும் எங்கள் ஊர்

வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்

கந்தளைக் குளம் பாய்ச்சும்

கழனி சூழ்ந்த தம்பை ஊர்

வரலாறு கண்ட ஊர்

வரராமன் ஆண்ட ஊர்

பேராறு வளஞ் சேர்க்கும்

பெருமை கொண்ட எங்கள் ஊர்


பச்சைப் பசேலென

பார்க்கும் இடங்க ளெல்லாம்

இச்சை கொள்ளச் செய்யும் ஊர்

எழில் கொஞ்சும் தம்பை ஊர்


மாதுமை மனம் மகிழ்ந்து

வாழும் ஊர் எங்கள் ஊர்

வேதனைகள் அற்ற ஊர்

விவசாயம் செழிக்கும் ஊர்


திடல் திடலாய் அமைந்த ஊர்

தீந்தமிழர் வாழும் ஊர்

உடல் தமிழுக் கென்று சொல்லும்

உத்தமர்கள் நிறைந்த ஊர்


புலவர்கள் வாழ்ந்த ஊர்

புதுமை பல கண்ட ஊர்

தலம் சிறந்த எங்கள் ஊர்

தம்பை ஊர் எங்கள் ஊர்


குளக்கோட்டன் அமைத்த ஊர்

குறு மன்னர் ஆண்ட ஊர்

வளம் நிறைந்த எங்கள் ஊர்

வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்


Bookmark and Share

Monday, August 17, 2009

Deepest Sympathy




Mr. Asaippillai Sivalingam of Kopay has passed away on 16.08.2009 at his residence at Kopay. He held several posts in the Srilankan State Service and also worked as an Engineer in the OFFER Ceylon, Trincomalee. He was the former president of Sri Sathya Sai Seva Samithy, Trincomalee and very devoted devotee of Bhagawan Sathiya Sai Baba for a long period.

He is leaving behind his wife and two sons. May his sou and rest in the lotus feet of Bhagawan Baba.


Bookmark and Share

Wednesday, June 3, 2009

எவ்வாறு அமைதி கொள்ளும் ?

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் 


பைந்தமிழ் மொழியில் வல்ல
பாவலா! தம்பை தந்த
செந்தமிழ் போற்றும் எங்கள்
தீந்தமிழ் கவிஞர் கோனே!
எந்தையே தமிழை உன்றன்
இறையெனப் போற்றி வாழ்ந்த
விந்தையை எண்ணி நாங்கள்
வியப்பினில் ஆழ்வதுண்டு



கற்றதோ கை மண் அளவு
காவியம் ஆக்கும் திறனை
பெற்றதோ எவ்வா றென்றறியாப்
பிதற்றுவர் உண்மை அறியார்
வாசிக்கும் திறனே உன்றன்
வளர்ச்சிக்கு உந்து கோலாம்
நேசிக்கும் தமிழைப்போற்றி
நெஞ்சினில் நிறைந்தாய் ஐயா



ஆதியாம் கோணை நாதன்
அன்பனாய் நீடு வாழ்ந்தாய்
பதிக்மும் பாடி ஈசன்
பக்கதனாய் மகிழ்ந்திருந்தாய்
ஊதியம் கருதா தென்ற
உணர் வுயர்க் கவிதையாலே
இயற்கையின் நுட்பங்களை 
எடுத்து நீ இயம்பினாயே


வரலாற்று நாவல் மற்றும்
வளமுறு சமூக நாவல்
இதயத்தை வருடிச் செல்லும்
இதமான சிறுகதைகள்
சுவையான கவிதை நூறு
தொடரான கட்டுரைகள்
இவையாவும் தந்த எங்கள்
இறைவா நீ ஏன் பிரிந்தாய்?


தொண்ணூற்றி யிரண் டகவை
தொல்லைகள் எது்வுமின்றி
பண்ணோடு பசுமையான
பல்கலைத் துறைகளோடும்
கண்போல எம்மைக்காத்த
காவலா உன் பிரிவை
எண்ணியே எங்கள் நெஞ்சம்
எவ்வாறு அமைதி கொள்ளும் ?


வே.தங்கராசா

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்  அவர்கள் பற்றி அறிய http://vellautham.blogspot.com/


Bookmark and Share